சோனு சூட்டை கவுரவிக்கும் ரயில்வே
சோனு சூட்டை கவுரவிக்கும்
ரயில்வே
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட
தொழிலாளர்கள், மாணவர்கள் என
அனைவருக்கும் நடிகர் சோனு சூட்
உதவி செய்து வந்தார்.

இந்நிலையில்,
அவரை கவுரவப்படுத்தும் விதமாக,
ரயில் நிலையங்களில் மக்கள் கடைபிடிக்க
வேண்டிய விதிமுறைகள் குறித்து
விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை
சோனு சூட் குரலில் பதிவு செய்து
ஒலிபரப்ப மேற்கத்திய ரயில்வே
அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
5 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு –
அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியின்போது இறந்த
ஊழியர்களின் வாரிசுகளுக்காக 5 மருத்து
இடங்களை ஒதுக்கீடு செய்து புதுச்சேரி
அரசு அறிவித்துள்ளது. அதன்படி,
கொரோனா முன்களப் பணியாளர்களின்
வாரிசுகளுக்காக 5 மருத்துவ இடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில்
தகுதி பெற்றவர்கள் டிசம்பர் 21-க்குள்
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
உறவுக்கு முன் இதை செய்தால்…
எச்சரிக்கும் மருத்துவர்கள்
உடல் உறவில் ஈடுபடும் முன் பெண்கள்
சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால்,
சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும்
அபாயம் குறையும் என சொல்லப்படுவது
தவறு என்று ஓர் ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
உறவின் போது
நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள் எளிதில்
சிறுநீர்ப்பாதையில் நுழைந்து தொற்றை
ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க உறவுக்கு
முன்னும் பின்னும் சிறுநீர் கழிப்பது
சரியான தீர்வாக இருக்கும் என்கின்றனர்
மருத்துவர்கள். சிறுநீர்ப்பாதை தொற்றால்
அடிவயிற்று வலி, அடிக்கடி சிறுநீர்
கழித்தல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள்
ஏற்படும்.