Breaking:முதல்வர் ஈபிஎஸ் அதிரடி – யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு
Breaking:முதல்வர் ஈபிஎஸ்
அதிரடி – யாரும் எதிர்பார்க்காத
அறிவிப்பு
சாதிவாரி புள்ளி விபரங்களை சேகரிக்க
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி
குலசேகரன் தலைமையில் ஆணையம்
அமைத்து முதல்வர் ஈபிஎஸ் அதிரடி
அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குலசேகரன் தலைமையிலான ஆணையம்
உடனே செயல்பாட்டுக்கு வருவதோடு
விரைவில் புள்ளி விபரங்களை திரட்டி
அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும்
சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து
நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து
மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் – கஸ்தூரி விமர்சனம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து
நடிகை சனம் ஷெட்டி நேற்று
வெளியேற்றப்பட்டார். இது குறித்து
நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில்,
“நியாயமான நேர்மையான முறையில்
மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி
விளையாடப்படும் ஒரு Game என்று
இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு
வரவும்.
மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும்
கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து
மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு
பேரு என்ன தெரியுமா?” என்று தனியார்
தொலைக்காட்சியை விமர்சனம்
செய்துள்ளார்.
பரபரப்பு: பாலியல் தொல்லை –
காவலருக்கு மண்டை உடைப்பு
சென்னை வடபழனியில் பேருந்துக்கு
காத்திருந்த பெண்ணுக்கு காவலர் ஒருவர்
பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள்
காவலருக்கு தர்ம அடி கொடுத்ததில்
அவரது மண்டை உடைந்தது. பணிமுடிந்து
வீடு திரும்பிக் கொண்டிருந்த காவலர்,
மதுபோதையில் சில்மிஷம் செய்துள்ளார்.
மேலும், காவலரை பணி நீக்கம் செய்து
கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.