இனிமே முகக்கவசத்தை மறந்துட்டு போகாதீங்க. ஆப்பை தேடி வாங்காதீங்க
இனிமே முகக்கவசத்தை மறந்துட்டு போகாதீங்க. ஆப்பை தேடி வாங்காதீங்க
மாஸ்க் இல்லையா?- கொரோனா
சிகிச்சை மையத்தில் பணி
முகக்கவசம் அணியாமல் வெளியே
வரும் நபர்கள் கொரோனா சிகிச்சை
மையத்தில் கட்டாயம் பணி செய்யவேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.

எச்சரிக்கை
மற்றும் அபராதம் ஆகியவற்றை
பொருட்படுத்தாமல், முகக்கவசம்
அணியாமல் வெளிவருபவர்கள்,
மருத்துவம் தொடர்பு இல்லாத இடத்தை
சுத்தம் செய்தல், சமயல் செய்வதில்
உதவுதல், தகவல் சேகரிப்பு போன்ற
பணிகளில் ஈடுபடுத்தலாம் என்று
தெரிவித்துள்ளது.
கோட்டையில் என்னுடன்
விவாதிக்க தயாரா?- ஆ.ராசா
தமிழகத்தின் பட்ஜெட் அளவுக்கு
2ஜியில் திமுக ஊழல் செய்ததாக தமிழக
முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டிய
நிலையில், அது குறித்து கோட்டையில்
என்னுடன் விவாதிக்க தயாரா? என்று
ஆ.ராசா கேள்வியெழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த
ஜெயலலிதாவே சொத்துக்குவிப்பு
வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர்தான்.இவ்வாறு அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து எடப்பாடி ஆட்சி செய்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
ஆஸ்திரேலிய வீரரை நெகிழ
வைத்த கே.எல்.ராகுல்!
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள்
போட்டியில், அறிமுகமான ஆஸ்திரேலிய
வீரர் கேமரூன் கிரீன், “கே.எல் ராகுல்
ஸ்டம்பிற்கு பின்புறம் நடந்து கொண்ட
விதம், எனக்கு வியப்பளித்தது.
நான்
களமிறங்கிய போது பதட்டமாக
இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்.
நான் ‘ஆம். கொஞ்சம் பதட்டமாக
இருக்கிறது’ என்றேன். அவர் உடனே
‘சிறப்பாக விளையாடு இளம்வீரரே’
என்றார். அதை நான் என்றும் நினைவில்
வைத்திருப்பேன்” என்று பேட்டியில்
தெரிவித்தார்.
.